ஆந்திரா: கிருஷ்ணா மாவட்டத்தின் வெங்கட நரசிம்மபுரத்தில் பெண் ஒருவர் கள்ளக்காதலனுக்காக தனது கணவரை கொடூரமாகக் கொன்றுள்ளார். லட்சுமணன், பவானி தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சமீபத்தில் பவானிக்கு அவரது உறவினர் பிரதீப் உடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது லக்ஷ்மனுக்குத் தெரிந்ததும், அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனிடையே பவானியும், பிரதீப்பும் சேர்ந்து லட்சுமணனை தீர்த்துக் கட்டியுள்ளனர்.




