காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா கல்லூரி விடுதி அறையில், 3ஆம் ஆண்டு மாணவி நிகிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டப்பட்டிருந்த விடுதி அறையில் இருந்து மாணவியின் உடல் சுமார் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




