Oplus_131072
கால்களில் ஏற்படும் வீக்கத்திற்கு கொத்தமல்லி விதைகள் ஒரு டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி காலை வெறும் வயிற்றில் அல்லது மாலை 5 மணி அளவில் குடித்து வரலாம் இவ்வாறு ஒரு வாரங்கள் குடித்து வர கால் வீக்கம் குறைவதை காண முடியும்.
கால் வீக்கம் தொடர்ந்து இருந்தால் அது சிறுநீரக பாதிப்பின் அறிகுறி உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம்.
எப்சம் உப்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தண்ணீரைக் கொதிக்க வைத்து ஒரு பக்கெட்டில் இந்த தண்ணீரை ஊற்றி எப்சம் உப்பை போட்டு கால்களை மூழ்கும் அளவிற்கு பத்து நிமிடங்கள் வைத்து துடைத்துவிட்டு ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரு சிட்டிகை ஓமம் போட்டு காய்ச்சி அந்த எண்ணையை மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து விட்டு காலையில் வெந்நீரில் கால்களை கழுவிக்கொள்ளலாம் இவ்வாறு தொடர்ந்து செய்வதால் கால் வீக்கம் குறையும்.




