கோர விபத்து..!! 4 வயது பெண் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு..!!
செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியில் உள்ள சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் 4 வயது பெண் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூரில் இருந்து சென்னை சிந்தாதிரிப்பேட்டைக்கு சென்றபோது நடந்த இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் அனீஷ்(30), உஷா ராணி(48), அவரது மகள் சாய் மோனிஷா(4) உயிரிழந்தனர். மேலும், உஷா ராணியின் கணவர் ஜெயவேல்(52), மகன் சாய் மோஹித்(4) ஆகியோர் படுகாயங்களுடன் செங்குன்றம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




