Oplus_131072
சர்க்கரை நோய் வந்த பிறகு கட்டுப்படுத்துவது சிரமம். ஆனால் சிறிய பழக்கவழக்கங்களை மாற்றி முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டால், சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.
உணவு பழக்கம்
மரபணுமாற்றபட்ட வெள்ளை அரிசி, மைதா, வெள்ளைசர்க்கரை குறைத்து, நாட்டுரக அரிசி, கம்பு, கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானியங்களை சாப்பிடவும். நாட்டுவெல்லம், நாட்டுசர்க்கரை பயன்படுத்தவும்.
காய்கறி, கீரை, பழங்களை தினசரி சேர்க்கவும்.
அதிக எண்ணெய், பொரியல், ஜங்க் ஃபுட் தவிர்க்கவும்.
உடற்பயிற்சி
தினமும் குறைந்தது 30–45 நிமிடம் நடைப்பயிற்சி.
யோகா, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவற்றை பழக்கமாக்கவும்.
உடல் எடை கட்டுப்பாடு
அதிக எடை (Obesity) சர்க்கரை நோயின் முக்கிய காரணம்.
உடல் எடை சரியான அளவில் இருக்க வேண்டும்.
முழுமையான தூக்கம்
தினமும் 7–8 மணி நேரம் நல்ல தூக்கம்.
தூக்கமின்மை இன்சுலின் சுரப்பை பாதிக்கும்.
மனஅழுத்தக் கட்டுப்பாடு
மன அழுத்தம் குறைவதற்காக தியானம், பிராணாயாமம், ஓய்வு.
அதிக கோபம், கவலை சர்க்கரை அளவை உயர்த்தும்.
தீய பழக்கவழக்கங்கள் தவிர்ப்பு
புகைபிடித்தல், மது அருந்துதல் சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
தினசரி சோதனை
குடும்பத்தில் சர்க்கரை நோய் வரலாறு இருந்தால், ஆண்டிற்கு ஒருமுறை ரத்த சர்க்கரை பரிசோதனை அவசியம்.
விழிப்புணர்வு வரிகள்
சிறுதானியம் சாப்பிட்டு வாழ்வோம்,
உடற்பயிற்சி தினமும் செய்வோம்,
தூக்கம், தியானம் நலம் தரும்,
சர்க்கரை நோய் நம்மைத் தடுக்கலாம்.



