சிறப்பாக புலன் விசாரணை செய்த 10 காவலர்களுக்கு முதல்வரின் சிறப்பு பதக்கம்!

 

 

2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, புலன் விசாரணைப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களை கவுரவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

இதன்படி, சிறப்பாக பணியாற்றிய 10 காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

 

விருது பெறும் ஒவ்வொருவருக்கும் 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றியதை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

 

இந்த சிறப்பு விருதுகளை தமிழக முதலமைச்சர் நாளை வழங்க உள்ளார். காவல்துறையினரின் திறமையான புலன் விசாரணைப் பணியை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது.

Read Previous

ஆதாரில் தகவல் மாற்றம் செய்ய எத்தனை முறை முடியும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

Read Next

ஜே.பி. நட்டாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: எய்ம்ஸில் அனுமதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular