சூடு அதிகமாகி கண்ணில் இருந்து நீர் வருகிறதா..?? கண்களை கசக்கி கொண்டே இருக்கணும் போல தோன்றுகிறதா..?? இதோ உங்களுக்கான தீர்வு..!!
இந்த கோடை காலத்தில் பலருக்கும் சூடு சம்பந்தமான பிரச்சனையால் சூடு அதிகமாகி கண்ணில் இருந்து நீர் வரும். கண்களை கசக்கி கொண்டே இருக்கணும் போல கூட தோன்றும். இந்த பிரச்சனையை நாம் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரை திறந்தவுடன் சாதத்தில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு சின்ன வெள்ளை துணியில் வைத்து மூட்டையாக கட்டி இந்த விளக்கெண்ணெயில் தேய்த்து கண் இமைகள் மீது ஒட்டி ஒட்டி எடுங்கள் இதுபோல மூன்று நாள் செய்தால் நான்காம் நாள் கண் தெளிவாக தெரிவதோடு வலியும் இருக்காது கண்களை கசக்கி கொண்டே இருக்கணும் போல கூட தோன்றாது. இது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்ய முடியும். எனவே உங்களுக்கு கண்களில் சூடு காரணமாக தண்ணீர் மற்றும் கண் அரிப்பு கண்களை கசக்கி கொண்டே இருக்கணும் போல தோன்றினால் இதை கண்டிப்பா செஞ்சு பயன்பெறுங்கள்.




