இன்றைய காலகட்டத்தில் பலரும் செல்ல பிராணிகளை வளர்ப்பது எளிதாகிவிட்டது அப்படி வளர்ப்பவர்கள் செல்ல பிராணிகளுக்கு முத்தம் கொடுப்பது தன் அருகில் உறங்க வைப்பது இது போன்ற நிகழ்வுகளில் பலரும் ஈடுபடுகின்றனர் ஆனால் செல்லப் பிராணிகளால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்ததே இல்லை..
பொதுவாக குழந்தைகளை முத்தமிடும் போது அவர்களுக்கு பாக்டீரியா போன்ற தொற்று ஏற்படலாம் என மருத்துவர்கள் கண்டிப்பார்கள் ஏனென்றால் முத்தம் கொடுக்கும் போது வாயில் உள்ள எச்சில் குழந்தைகளின் சருமத்தில் படும் அது குழந்தைக்கு பிரச்சனையாகலாம். அதே போல் தான் செல்ல பிராணிகளை முத்தமிடும்போது பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்புள்ளது. செல்ல பிராணிகளை நாம் என்னதான் சுத்தமாக வைத்தாலும் அவை வெளியில் சென்று சுதந்திரமாக அடையக்கூடியவை அதனால் எப்போதும் அவை பாக்டீரியா வைரஸ்களின் இருப்பிடமாகவே மாறிவிடுகின்றன, முடிந்தவரை செல்ல பிராணிகளுக்கு முத்தம் கொடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் இதனால் நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்…!!




