உத்தரப்பிரதேசம்: ஷாஜஹான்பூரில், கணவர் சேலை வாங்கித் தராததால் ஏற்பட்ட தகராறில், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தர்மபால், பாப்லி (25) தம்பதிக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம், கணவர் வேலைக்குச் சென்ற பிறகு, பாப்லி வீட்டிற்குள் தூக்கிட்டார். குடும்பத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை சிகிச்சையின் போது அவர் இறந்தார். காவல்துறையினர் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.




