பெரும் சோகம்..!! இறப்பிலும் இணை பிரியாத தம்பதி..!! ஒரே இடத்தில் உடல் தகனம்..!!
ஒடிசாவில் கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவியும் இறந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா பிரசாந்த் பிஸ்வால் மற்றும் ஜரனா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி ஆவர். அண்மையில் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (டிச. 24) அவர் உயிரிழந்த நிலையில் இது குறித்து ஜரனாவுக்கு தகவல் தரப்பட்டது. கணவர் இறந்த செய்தி கேட்டு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இருவரின் சடலங்களும் அருகருகே தகனம் செய்யப்பட்டன.




