திருப்பூரில் பணிபுரிந்து வந்த டிராவிட் (26), தனது மனைவி மாரியம்மாள் (23) உடன் ஆடிப்பெருக்கு விழாவிற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில், நேற்று (ஆக.04) அவர் தனது மனைவியுடன் கூடலூரில் இருந்து பைக்கில் திருப்பூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே டிராவிட் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மாரியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




