டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல்..!! என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?..

இந்த ஆண்டு 2025ல் டாடா சியாராவின் ICE மற்றும் EV புதிய மாடல் கொடுத்துள்ளதாக டாடா நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் கார் மீது அதிக நாட்டம் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர். இதனாலேயே இந்தியாவில் பல்வேறு கார் நிறுவனங்கள் இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புது புது அம்சங்கள் கொண்ட புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அனைவருக்கும் பேவரைட் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வரிசையில் வரலாற்று சிறப்புமிக்க மாடலான டாடா சியரா, புதிய பரிமாணமாக ICE மற்றும் EV வடிவில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த புதிய காரை டெல்லி பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ இந்த 2025-ல் இன்று ஜனவரி 17ம் தேதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த காரின் முக்கிய அம்சங்களான பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ADAS பாதுகாப்பு தொழில்நுட்பம்,  மூன்று 12.3 inch திரைகள், Harman ஒலி அமைப்பு,  உள்ளிட்ட அம்சங்களுடன் களமிறங்க இருக்கிறது.

அதுமட்டுமின்றி,  1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் (170 PS/280 Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) அல்லது 2-லிட்டர் ஆகியவற்றுடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.10.50 லட்சத்தில் இருந்து தொடங்கும் என கூறப்படுகிறது.

Read Previous

பெண்களுக்கான பதிவு..!! அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்..!!

Read Next

மத்திய கல்வித்துறை வேலைவாய்ப்பு..!! பொது மேலாளர் காலியிடங்கள்..!! சம்பளம்: Rs.220000..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular