தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ்-ரயில் நிலையங்கள் அருகே விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார். இக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும், ஆண்டுக்கு ரூ.48,000 கோடி வருவாய் தரும் இத்துறையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் முதற்கட்டமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.




