தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை (ஏப்., 23) நடைபெற உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று முதல் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இனி வரும் 24ஆம் தேதி மதியம் 12 மணிக்கே கடைகள் திறக்கப்படும் என்பதால் மதுபானம் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் தவித்து வருகின்றனர். சிலர் ஏற்கனவே அதிகளவில் வாங்கிப் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பீர் பாட்டில்களையும் பலர் பதுக்கி வைத்து விற்று வருகின்றனர்.




