தஞ்சாவூரில் பசியாறும் சோலை திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்து சிறப்பித்துள்ளனர்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனையில் பசியாறும் சோலைத் திட்டத்தை அன்பில் மகேஷ் அவர்களின் அறக்கட்டளை சார்பாக நோயாளிகளுக்கு தினசரி காலை உணவு வழங்கப்பட உள்ளது, திட்டத்தில் அமைச்சர் மா சுப்பிரமணி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர், மேலும் அன்பில் மகேஷ் அவர்கள் கல்வெட்டை திறந்து வைத்து மக்களின் நலனுக்காக இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார், திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வை வரவேற்றனர், நோயாளிகளுக்கு காலை உணவு வழங்குவதே சிறந்த வழிமுறையாக இருக்கும் என்றும் அவர்களின் நலனுக்காக இத்திட்டத்தை தமிழக அரசு செய்கிறது என்றும் அன்பில் மகேஷ் மற்றும் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்..!!




