அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் முடிவுக்கு வந்ததாக வெளியான தகவல்களின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை இன்று (ஜூன்.15) உற்சாகமான தொடக்கத்தை கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டியும் 300 புள்ளிகளுக்கும் மேல் உயர்வை பதிவு செய்துள்ளது.




