திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே, தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 26 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கதவு திறந்திருந்ததை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்த போதை நிலையில் இருந்த வாலிபர், மூதாட்டியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி கரிப்போர் கிராமத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி பசுபதி (26) என்பவரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




