தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பல்வேறு மாவட்டங்களில் சர்வர் கோளாறு காரணமாக பொருட்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், ரேஷன் கார்டுதாரர்கள் நவம்பர் மாதத்திற்கான அரிசியை தீபாவளி முடிந்த பிறகு பெற்று கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.




