தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22.09.24) பவர் கட்டா?.. வெளியான முக்கிய தகவல்..!!

தமிழக மின்வாரியத்தில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட பகுதிகளில் வழக்கமாக காலை 9 அல்லது 10 மணிக்கு துவங்கி பிற்பகலில் அல்லது மாலைக்குள் முடிந்து விடும். இதனால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்தடை இருக்காது.

இந்நிலையில், நாளை மறுநாள் செப்டம்பர் 23 ம் தேதி திங்கட்கிழமை அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர்-நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, எண்ணூர் – நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர். பேரலி – கல்பாடி, ஆசூர், கே.புதூர், பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

தினமும் எட்டு வடிவ நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்..!!

Read Next

தைராய்டு பிரச்சனையை போக்க.. சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular