தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கும் பணிகள் தீவிரம்..!! பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதோடு, பட்ஜெட் கூட்டத் தொடர் மற்றும் கோடை காலம் போன்ற காரணங்களுக்காக, தமிழ்நாட்டில் தடையற்ற மின்சாரம் வழங்கும் பணிகளில் மின்சார வாரியம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி,  தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்சாரத் தடை என்பது இருக்காது என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் தடையற்ற மின்சாரம் வழங்கும் பணிகளை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த மின் பொறியாளர்களுக்கு, மின் தொடரமைப்பு கழக இயக்குனர் ஜெ. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மின்சார தடை ஏதேனும் நிகழ்ந்தால் உடனடியாக சரி செய்யவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை தீவிரப்படுத்தவும் அனைத்து மின் வாரியங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அவசர கால பணிகளுக்கு ஏற்றவாறு தேவையான ஊழியர்களையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Read Previous

உணருங்கள் தம்பதிகளே.. கணவன் மனைவி சண்டைக்கும், பிரிவுக்கும், விவாகரத்துக்கும், திருமணம் கடந்த உறவுக்கும் இது தான் காரணம்..!!

Read Next

மத்திய ஆயுதக் காவல் படையில் 357 காலியிடங்கள் அறிவிப்பு..!! சம்பளம்: Rs.56,100..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular