ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டி (45) – ரம்யா கிருஷ்ணா (38) தம்பதிக்கு குழந்தை இல்லை. கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்ய முடிவு செய்த தம்பதி, ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் மாறி, மாறி குத்திக்கொண்டனர். இதில் ராமகிருஷ்ணா கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். படுகாயமடைந்த ரம்யா கிருஷ்ணா, கணவரது பிணத்துடனே ஒருநாள் சோர்வுடன் கிடந்துள்ளார். உயிர் பிரியாத நிலையில் வலி தாங்க முடியாமல் போலீசுக்கு அவர் தகவல் அளித்திருக்கிறார்.




