இன்றைய சூழலில் சிறியோர் முதல் பெரியவர் வரை ஜலதோஷம் தலைவலி போன்ற பிரச்சனைகளில் தவித்து வருகின்றனர், அவர்கள் தலைபாரம் மற்றும் தலைவலி ஜலதோஷம் போன்ற நோய்களிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி வீட்டு வைத்தியமே..
எவ்வளவுதான் மருத்துவமனைக்கு சென்றாலும் வீட்டிலிருந்து செய்யக்கூடிய இயற்கையான மருத்துவத்தினால் ஜலதோஷம் தலைவலி தலைபாரம் நீங்கும், தலையில் நீர் கோர்த்து கொள்வதால் தலைபாரம் கண்ணிலே நீர் வடிதல் சளி, தும்பல் தொண்டை வலி என தொடர் பிரச்சினைகள் வரும், இதற்கு ஒரு வெற்றிலை கழுவி துடைத்து அதனுடன் இரண்டு கிராம்பு இரண்டு ஏலக்காய் ஆறு மிளகு சிறிதளவு வெல்லம் வைத்து சுருட்டி வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு வர வேண்டும், ஒரு நாளைக்கு இரண்டு வேளை விதம் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சளி நீங்கி பிரச்சனைகளும் சீராகும், மேலும் ஜலதோஷத்திலிருந்து உடனடி தீர்வு கிடைத்துவிடும், தொடர்ந்து தலைக்கு எண்ணெய் தேய்ப்பதன் மூலம் தலைபாரம் நீங்கும் காரணம் தலையில் சூடு குறைந்து உடல் குளிர்ச்சியாகும்..!!




