சென்னை: “அண்ணா தொடங்கி, கலைஞர் கட்டிக்காத்த திமுகவில் இணைந்தது பெரு மகிழ்ச்சி” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “நாட்டு மக்களுக்கு தளபதி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த எந்த திட்டமும் மக்கள் மனதில் நிற்கவில்லை” என்றார். முன்னதாக, தமது ஆதரவாளர்களோடு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார்.




