திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (ஆக.5) இரவு குற்றச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சண்முகசுந்தரம் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சகோதரர்கள், எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் வைத்து உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.




