திருப்பூரில், டாஸ்மாக் கடையில் செல்போனில் புகைப்படம் எடுக்க மறுத்த கட்டிட தொழிலாளி பாக்கியராஜை, சிவபாலகிருஷ்ணன், ரஞ்சித், அஜய் ஆகியோர் மதுபாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பாக்கியராஜ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வீரபாண்டி போலீசார் சிவபாலகிருஷ்ணன், ரஞ்சித் ஆகியோரை கைது செய்து, அஜயை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நொச்சிபாளையம் பிரிவில் நேற்று முன்தினம் நடந்துள்ளது.




