திருப்பூர் மாவட்டத்தில் திருமணமான 78 நாளில் புதுப்பெண் காருக்குள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ரிதன்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இறப்பதற்கு முன் தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஆடியோவில், “என்னால் வேறு ஒரு வாழ்க்கையை தேர்வு செய்ய முடியாது. ஒருவனுக்கு ஒருத்திதான். கணவர், மாமனார், மாமியார் கொடுமை தாங்க முடியவில்லை. இனியும் உயிரோடு இருக்க விரும்பவில்லை” என்றார். போலீஸ் விசாரிக்கிறது.




