விஜய் டிவி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தோன்றியாதன் மூலம் பிரபலமானவர்தான் பாலா. காரைக்காலில் பிறந்து வளர்ந்தவர் பாலா. சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசையுடன் சென்னைக்கு வந்தார்.
ஆனால் சென்னைக்கு வந்தவுடன் அவருக்கு எந்தவித வாய்ப்பும் அமையவில்லை. அப்போது சின்னத்திரையில் பணியாற்றும் அமுதவானனின் ஆதரவை பெற்றார். அவர் மூலம் விஜய் டிவியில் அது இது எது போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் நடிக்க ஆரம்பித்தார் பாலா.
2017 ஆம் ஆண்டு கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் தோன்றியாதன் மூலம் பிரபலம் அடைந்தாதால் தனது பெயருக்கு முன்னால் கலக்கப்போவது யாரு KPY பாலா என்று வைத்துக்கொண்டார். அதற்கு அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்ததன் மூலம் பேரும் புகழும் அடைந்தார் பாலா.
இது தவிர சில படங்களிலும் தோன்றியிருக்கிறார் பாலா. இவர் மற்றவற்றில் பிரபலம் அடைந்ததை காட்டிலும் இவர் இயலாதாவர்களுக்கு உதவுவதன் மூலம் பிரபலம் அடைந்து வருகிறார். மாற்று திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுப்பது பஸ் சேவை இல்லாத ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி தருவது போன்ற பல உதவும் செயல்களை செய்து வருகிறார் மற்றும் அது வீடியோவாகவும் அவ்வபோது வெளிவரும்.
இந்நிலையில் தற்போது இன்று தீபாவளியை முன்னிட்டு KPY பாலா ஆதரவற்றவர்களை துணி கடைக்கு கூட்டிச்சென்று அவர்களுக்கு விருப்பமான துணியை வாங்கி கொடுத்து இருக்கிறார். இது பார்ப்பதற்கே மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




