தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? வால்நட் சாப்பிடுங்கள்..
ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டவை இந்த கொட்டைகள். மூளையை அமைதிப்படுத்துவதோடு, ‘டிமென்ஷியா’ என்ற ஞாபக சக்தி குறைவு நோயையும் இது வரவிடாமல் தடுக்கிறது.
இதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒமேகா 3 அமிலம் அதிகம் கொண்டது வால்நட். இதனால் கெட்ட கொழுப்பை உடலில் குறைத்து, நல்ல கொழுப்பை அளிக்கிறது.
இதனை பாலில் கொதிக்க வைத்து அருந்தினால் கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது.
மூளையின் அமைப்பைக் கொண்டுள்ள இந்த பருப்பு உண்மையில் மூளைச்சோர்வை நீக்கி நினைவாற்றலை அதிகரிக்கிறது.
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அழகான கட்டுடலைத் தரும் ஆற்றல் கொண்டது. தோலுக்கு மினுமினுப்பை தந்து சொறி, சிரங்கு, படை போன்றவற்றை குணமாக்கிடவும் செய்வது வால்நட்.




