நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, சென்னை-தூத்துக்குடி (NH-32) 4 வழிச்சாலை திட்டம் தற்போது கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி (NH-32) TTK சாலை என அழைக்கப்படும் இத்திட்டம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சுமார் 106.9 கி.மீ. தொலைவில் அமையவுள்ளது. இதற்காக 853.09 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.




