Oplus_131072
இரண்டு மேசைக்கரண்டி கொத்தமல்லி விதையை எடுத்து 200 மில்லி நீரில்
போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து
அதிகாலையில் அதை பிழிந்து சாறெடுத்து
காலை உணவிற்கு ஒரு மணிநேரம்
முன்பு 24 முதல் 48 நாட்கள் குடித்து வந்தால் தைராக்சின் சுரப்பில் உள்ள சீரின்மை குணமாகும்
.(தைராய்டு)
வயிற்றுப் பெருமல் தீரும்.அதிகமாக
பேதி போவது ,இரத்தக் கழிச்சல்,
உடல் சூடு சரியாகிவிடும்.
அடிக்கடி விக்கல் வருவது வாந்தி
வருவது போன்ற உணர்வு கட்டுப்படும்.
நாவறட்சி,அடிக்கடி வரும் ஏப்பம் கட்டுப்படும்.சிறுநீர் எரிச்சல் தீரும்.
புண்கள் விரைந்து ஆறும்.கண்
கருவளையம் போகும்.
இரத்தம் சுத்தமாகும்.
கால் கிலோ கொத்தமல்லி விதையை
இரும்பு அல்லது மண்ச்சட்டியில் வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு அதில் தேக்கரண்டி பொடியை எடுத்து
தினமும் காலை உணவிற்கு ஒரு
மணி நேரம் முன்பு அல்லது
உணவிற்கு பின் 50 மில்லி சாதாரண
நீரில் கலந்து குடித்து வந்தாலும்
மேற்கண்ட வியாதிகள்
குணமாகவோ கட்டுப்படவோ செய்யும்.
மருந்து உண்ணும் காலங்களில் பிரதான உணவாக பார்லி கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி, உளுந்து கஞ்சி, உளுந்து களி, நெல் பொரி கஞ்சி அரிசிக்கஞ்சி அல்லது கேழ்வரகு கஞ்சியே சாப்பிட வேண்டும்.
உப்பு,புளி,காரம் குறைத்து இரசாயண
உணவுகள் அசைவ உணவுகளை
முற்றிலும் தவிர்த்தால் வேகமான
நிவாரணம் பெறலாம்.
கூடவே சர்வாங்காசனம் மட்ச்யாசனம், சாந்தியசனம்
போன்ற யோகாசனங்களை
தினமும் 30 நிமிடம் வரை
பழகி வருவது நல்லது.
உப்பை முருங்கைக்கீரை கருவேப்பிலை போட்டு வறுத்து அவற்றை பயன்படுத்தவும்
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை முருங்கைக்கீரை ஒரு கைப்பிடி சீரகம் அரை ஸ்பூன் இஞ்சி ஒரு துண்டு அறை எலுமிச்சம் பழம் உப்பு இரண்டு கல் கலந்து அரைத்து ஐந்து முதல் பத்து மில்லி வரை சாப்பிட்டு வர உடல் கழிவுகள் நீங்கி உடல் ஆரோக்கியம் ஏற்படும்
பழங்கள் காய்கறி சாலட் கீரைகள் புட்டவியல் செய்த காய்கறிகள் காய்கறி கடைசல் போன்றவற்றை உண்டு மகிழலாம்
என்னை உணவுக்கு பதிலாக நெய் சேர்த்து பயன்படுத்தலாம்.




