தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் நகை கொள்ளை..!! பெரும் பரபரப்பு..!!
தோஷம் கழிப்பதாக நகை திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சேலத்தில் யுவராணி (48) என்பவரின் வீட்டுக்கு வந்த நபர், உங்களுக்கு தோஷம் இருக்கிறது, அதனை கழிக்க பூஜை நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரிடம் அணிந்திருந்த நகையை சொம்பில் கழற்றி போடுமாறு கூறியுள்ளார். இதை நம்பி ஒரு பவுன் நகையை கழற்றி போட்டார். பூஜை முடிந்து அந்த நபர் சென்ற பின், சொம்பில் பார்த்தபோது நகை இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




