ஒன்பது இரவுகள் என்பதை பொருள்படுத்தும் நவராத்திரி, அமாவாசையை தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களில் நடக்கும் வழிபாடுகளை குறிக்கிறது. நவராத்திரியின் முதல்நாள் சக்தியின் வடிவமான அன்னை துர்கா தேவியின் அவதாரம் மகேஸ்வரியை வழிபாடு செய்ய வேண்டும். ஆயுள், செல்வம், விருத்தி உண்டாக முதல் நாள் வழிபாடு முக்கியம். அரிசி மாவினால் கோலமிட்டு, வெண்பொங்கல் படைத்து வழிபாடு செய்வது நல்லது.




