நீட் தேர்வு முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினரும் இளைஞர்களும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர்.
பேரணியைத் தடுக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 118 காவலர்கள் உள்பட மொத்தம் 178 பேர் காயமடைந்ததாகவும், 70 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் ஆதரவுடன் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




