சென்னையின் 2-வது விமான நிலையத்தை பரந்தூருக்குப் பதிலாக வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று ஒன்றிய இணையமைச்சர் முரளிதர மொஹோல் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் திமுக ஆட்சிக்காலத்திலேயே தொடங்கப்பட்டதாகவும், தற்போது அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.




