நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிராகரித்துள்ளது.
பிரதமரின் X தள பதிவை சுட்டிக்காட்டிய CJP, நீட் முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வழக்குகளை விரைவாக விசாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை விட, இந்த விவகாரத்திற்கு பொறுப்பானவர்கள் பதவி விலகுவதுதான் முதன்மையான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என அக்கட்சி தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.