நூதன முறையில் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கணவர் மூலமாக 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது செய்யப்பட்டார். நிலத்தை அளந்து பட்டா வழங்க விண்ணப்பித்திருந்த கீழ உரப்பனூரைச் சேர்ந்த அஜித்குமாரிடம், நில அளவையர் சித்ராதேவி லஞ்சம் கேட்டுள்ளார். அதோடு அந்த பணத்தை வேறு இடத்தில் உள்ள தனது கணவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இது குறித்து அஜித்குமார் அளித்த புகாரின் பேரில், பணத்தை வாங்கும்போதே சித்ராதேவியின் கணவரை பிடித்தனர்.




