Oplus_131072
மற்ற ஆலயங்களி்ல் பூஜைகள் நடைபெறும் போது ஆலய மணி ஓசை எழுப்பப்படுவது போல திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பூஜையின் போது மணி ஓசை ஒலிப்பதில்லை. இது காலம் காலமாக நடைபெற்று கொண்டு வரும் ஒரு விஷயம். இதைப்பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும். அநேகம் பேருக்கு இந்த விசயம் தெரிந்திருக்காது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசைக்கு கண்டநாதம் என்று பெயர். திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் மணி ஓசையான கண்டநாதத்தை கேட்பவருக்கு எப்பேர்பட்ட வியாதியும் தீரும். எப்படிபட்ட கடன் பிரச்சினை இருந்தாலும் அது தீர்ந்து செல்வ நிலையினை அடைய உதவும்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கண்டநாதம் (மணியோசை ) உங்கள் வாழ்வில் வளங்களை வாரி வழங்கிட திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் மணியோசை (கண்டநாதம்)
உங்கள் காதுகளில் ஒலிக்கட்டும்…
தீராத வியாதிகள் தீரவும், கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகவும் இன்ப நினைவுகள் நிகழ்ச்சிகள் உங்களை சுற்றியும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் நடக்க திருமலை திருப்பதி ஏழுமலையான் திருவருளால் நல்லதே நடக்கட்டும்.




