பல்லி நம் மேல் விழுந்தவுடன் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி இருப்பார்கள். மேலும், பல்லி நம் மேல் விழுந்தால் நல்லதா கெட்டதா என்று தெரியாமல் மனதில் ஆயிரம் குழப்பங்கள் எழும். இந்த வகையில் பல்லி நம் மேல் விழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பல்லி என்பது நவகிரகத்தில் உள்ள கேது பகவான் என்று கூறுவார்கள். மேலும், நம்மில் பலர் மகாலட்சுமியின் அம்சம் என்றும் சொல்வார்கள். பல்லி நம் மீது விழுந்தவுடன் தலைக்கு குளிக்க வேண்டும். பல்லி தலையில் விழுந்தால் கையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு தலையைச் சுற்றி மூன்று முறை விடுங்கள்.பல்லி நம் உடலின் வேறுபாகத்தில் விழுந்தால் அந்த இடத்தை கழுவி விட்டு மூன்று சொட்டுக்கள் பால் விட்டு கழுவி சுத்தமாக துடைக்கவும். இதையெல்லாம் செய்து முடித்தவுடன் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்பது ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.




