விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மோகன்ராஜ் (16) என்ற மாணவர் இன்று (ஆக.13) காலை சிறப்பு வகுப்புக்கு வந்துள்ளார். வகுப்பறையில் உள்ள மேஜையில் அமர்ந்த மாணவர் திடீரென மயங்கியுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாணவர் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.




