குமாரபாளையம் அருகே பஸ்ஸை முந்தி சென்ற டூவீலர் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் இருவர் படுகாயம் அடைந்தனர்..
குமாரபாளையம் அருகே அரசு பஸ்சை முந்தி சென்ற டூவீலர் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது, டூவீலரில் பயணித்த இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சேர்ந்தவர் விஜய் (22) மற்றும் விஜயின் பெரியப்பா மகன் ரவிக்குமார்(28), ரவிக்குமார் பல்சரை ஓட்டி வர பின்னதாக உட்கார்ந்து இருந்த விஜய் இருவரும் பேசிக்கொண்டே அரசு பேருந்து பஸ்ஸை வேகமாக கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாய் பள்ளத்தில் டூவீலர் கீழே விழுந்தது, இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் இவர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதன் பேரில் போலீஸார்கள் விசாரணை செய்து வருகின்றனர்..!!




