ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை அளிக்க பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட மத்திய அரசு சார்பில் ரூ.1.31 லட்சமும், மாநில அரசு சார்பில் ரூ.1.72 லட்சமும் வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் இதுவரை 2.82 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை கணக்கெடுக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது.




