Oplus_131072
பிரியாணி மசாலா பொடி…
சிறியவர்களில் இருந்தே பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்குமே பிரியாணி என்பது பிடிக்கும். ஒரு சிலர் சந்தோசமாக இருக்கும்போது பிரியாணி சாப்பிடுவார்கள் ஆனால் பல பேர் சந்தோஷமாக இருக்கும்போதும் சரி சோகமாக இருக்கும்போதும் சரி பிரியாணி சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். அந்த அளவிற்கு நம் நாட்டில் பிரியாணியின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பிரியாணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று அதுவும் ருசியை கூட்டுவது என்னவென்றால் பிரியாணி பொடி தான். அந்த பிரியாணி பொடியின் ரகசியத்தை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
30 நிமிடம்
2மேசை கரண்டி முழு தனியா
10 முந்திரி
1 மேசை கரண்டி சீரகம்
11/2மேசை கரண்டி கல்பாசி
6 ஏலக்காய்
1 மேசை கரண்டி முழு மிளகு
2 பிரியாணி இலை
2 அன்னாசிப்பூ
2 துண்டு பட்டை
2 ஜாதிபத்திரி
10 கிராம்பு
ஜாதிக்காய்
1 மேசை கரண்டி சோம்பு
இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும். பின்பு பிரியாணி செய்யும் போது இந்த பொடியை பயன்படுத்திப்பாருங்கள் ருசி சூப்பராக இருக்கும்.




