புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலம் சார்பில் 50 பக்தர்களுக்கு வைணவ ஆன்மிக தல சுற்றுலாவிற்கு இலவசமாக அழைத்துச் செல்லும் நிகழவு தொடங்கப்பட்டது. சனிக்கிழமைகளில் பக்தர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள நான்கு வைணவ திருத்தலங்களையும், ஸ்ரீபெரும்புதூரில் ஒரு திருத்தலத்தையும் கட்டணமின்றி தரிசிக்கலாம். பக்தர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.




