பெண்களின் நிதிநிலையை மேம்படுத்தும் முதலீடு திட்டங்கள்..!! வட்டி மட்டுமே இவ்வளவு கிடைக்குமா?..

பெரும்பான்மையான சாமானிய மக்கள் தாங்கள் சேமித்த நிதியை பாதுகாக்க பல்வேறு முதலீடு திட்டங்களை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் பெண்கள் தங்களது சேமிப்பை போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் நல்ல வருமானம் அளிக்ககூடியது என்று கருதி அவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். ஏனெனில் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மக்களின் பணத்திற்கான உரிய பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி வரிச் சலுகைகள் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. இந்நிலையில் மகளிருக்கு உதவும் சிறந்த போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் சிலவற்றை பற்றி இப்பதிவில் காண்போம்.

அதாவது, பெண்கள் தங்களது பொருளாதார தரத்தை மேம்படுத்த விரும்பினால் “மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS), சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY), கிசான் விகாஸ் பத்திரம் (KVP), தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) ஆகிய திட்டங்கள் 5-15 ஆண்டுகள் வரையிலான உங்களது நீண்ட கால முதலீடுகளுக்கு” சரியான தேர்வாக இருக்கும். இந்த திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு “ஆண்டுக்கு 7.4 % – 8.2% வரை வட்டி வருமானம் கிடைக்கும்”. இதை தொடர்ந்து, “ரூ. 1,000 முதல் ரூ.30 லட்சம் வரையிலான உங்களது முதலீட்டிற்கு பல்வேறு சலுகைகள் மற்றும் வரிவிலக்குகள் அளிக்கப்படுகிறது”. மேலும், இந்த திட்டங்கள் “பெண்களின் கல்வி மற்றும் திருமணத்திற்கு உத்தரவாதமான வருமானத்தை அளிக்கக்கூடிய பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களாக திகழ்கிறது என நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்”.

Read Previous

வில்வ இலையின் அற்புதமான மருத்துவ பயன்கள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

அனைத்து ஆண்களும் படிக்க வேண்டிய தகவல்..!! ஒரு பெண்ணின் ரகசியம்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular