Oplus_131072
பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா..??
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது அதுவும் குறிப்பாக குங்குமம் வைப்பது பழக்கமாக இருந்தது. நம் முன்னோர்கள் கூறிய பழக்கப்படுத்திய பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது பொட்டு வைப்பது. இதை எதற்காக வைக்கிறார்கள் இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது குங்குமம் வைப்பது என்பது நடைமுறையாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. மருத்துவ ஆராய்ச்சிகளின் படி நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடமாக இரு புருவங்கள் மத்தியில் இருக்கும் இடம் விளங்குகிறது அதாவது அந்த இடம் எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியாக வெளிப்படுத்தப்படுகிறது அதிலும் நெற்றி பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை அதனால் தான் நமக்கு தலைவலி ஏற்படும் பொழுது அதை குளிர்விக்க குங்குமம் உபயோகமாக இருக்கிறது குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கவும் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது .




