Oplus_16908288
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரில் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் இருந்த பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு காக்னர் சுகாதார மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதில், உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் உடலை நிலேஷ் பிலால் (25) இழுத்துச் செல்வது பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.




