பிஜு ஜனதா தள பெண் எம்.பி. சுல்தா தேவ்-ஐ பலாத்காரம் செய்து கொல்வேன் என நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள சுல்தா, தனக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல்கள் வந்ததாக குற்றம் சாட்டினார். அந்த நபர் அனுப்பிய மேசேஜ்களின் ஸ்கிரீன்ஷாட்களையும் பகிர்ந்துள்ளார். மிரட்டிய மஹிந்திரா நிறுவனத்தின் ஊழியரான சத்யபிரத் நாயக் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.




