குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கோமதி சக்கரம் கிடைப்பதால் இதை மக்கள் பூஜை அறையில் வைத்து வணங்குகின்றனர், இதனால் என்ன பயன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
கோமதி சக்கரம்
மனிதக்குலமாகிய எமக்கு பாவங்களில் இருந்து விடுபட மகான்கள் பல வழிபாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
அதில் ஒன்று கோமதி சக்கரம். இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்தது. துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் இதன் வேறு பெயர்கள்.
கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயிலாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும்.
இதை பற்றிய விரிவான விளக்கத்தை பிரபல பாடகி அனிதா குப்புசாமி தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரகின்றது.




