மஞ்சளின் மகிமையும் முக்கியத்துவமும்..!!

Oplus_131072

 

மனிதனின் குடும்ப வாழ்க்கைக்கு உப்பும் மஞ்சளும் மிக அவசியமான ஒன்றாகும்.ஆண்களுக்கு உப்பும்,பெண்களுக்கு மஞ்சளும் பலம் தரும். பெண்களின் அடக்க சக்திக்கும் மனவலிமைக்கும் மஞ்சள்தான் காரணம்.

மஞ்சளில் கறி மஞ்சள், பொன்குறட்டுமஞ்சள், கடுக்காய் மஞ்சள், பழுக்காய் மஞ்சள், குட மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள்,காட்டு மஞ்சள், குரங்கு மஞ்சள்,பலா மஞ்சள்,காஞ்சிரத்தின் மஞ்சள்,நாக மஞ்சள் என பல வகைகள் உண்டு.

சுத்தமில்லாத பெண்களின் தொப்புள் வழியாக கெட்ட ஆவிகள் உடலுக்குள் நுழைந்துவிடும்.

பிறகு அந்த பெண்ணுடன் சூட்சுமமாக உடலுறவில் ஈடுபடும்.கணவனுடன் எதற்கெடுத்தாலும் சண்டை போட வைக்கும்.இது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிகழ்ந்துவரும் ஒரு நிகழ்வு ஆகும்.

மஞ்சள் குங்குமம் என்பது மஞ்சள்பொடி, எலுமிச்சைசாறு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம்,பசுநெய்போட்டுத் தயார்செய்வது. இது நெற்றியில் வடு ஏற்படுத்தாது.

இயற்கையான மஞ்சள் பட்டுத்துணியில் மின்சார சக்தி உள்ளது.இரண்டு கைகளுக்கிடையில் ஒரு சிறிய மஞ்சள் பட்டுக் கைக்குட்டையை வைத்து என்ன மந்திரம் ஜபித்தாலும் அம்மந்திரத்தை ஈர்த்துக்கொள்ளும் சக்தி அக்கைக்குட்டைக்கு உண்டு.

மேலும் உள்ளங்கைக்கிடையில் வைத்து சக்தியூட்டிப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் நமக்குப் பாதுகாப்பு.மேற்படி உருவேற்றிய மஞ்சள் பட்டுக்கைக்குட்டையை நீரில் நனைக்ககூடாது. துவைக்ககூடாது.வேறு எந்த வகையிலும் சலவை செய்யக்கூடாது.செய்தால் மந்திரசக்தி போய்விடும்.

பெண்கள் மஞ்சள் அரைத்து உடலெங்கும் பூசி நீராடுவது நல்லது. இதனால், அவர்களுக்கு உடலில் காணும் காந்தல், தூக்கமின்மை போய்விடும். மேலும் உடல் சுத்தமடையும்.முகத்தில் களை வரும்.

குழந்தைகளுக்கு மஞ்சள் பூசிக்குளிக்க வைத்தால் அவர்களின் மேனி பொன்னிறமாக பளபளப்படையும். கறுப்பாக இருந்தாலும்!!!

பெண்கள் ஆகர்ஷண சக்தி பெற ஒரு சுலப வழி:

இது ஆண்களுக்கு கண்டிப்பாக செய்யக்கூடாது.

300 மி.லி.பசும்பாலைச் சுட வைக்க வேண்டும்.அதில் ஐந்து கிராம் மிளகைத் தட்டிப்போடவேண்டும்.

ஒரு கிராம் சுத்தமான விரலிமஞ்சள் பொடியை (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) பாலில் போட வேண்டும்.

இரண்டு பெரிய வெள்ளைப்பூண்டு தோலுரித்துஅப்பாலில் போட்டு பின்னர் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.

லேசான சூட்டில் இரண்டு தேக்கரண்டி பனங் கல்கண்டு போட்டு கலக்கி இரவு படுக்கும் முன் சாப்பிட்டு வரவேண்டும்.இப்படி தினமும் செய்ய வேண்டும். இதற்கு எந்த விதப் பத்தியமும் கிடையாது.

Read Previous

உப்பு பரிகாரம்..!! இதை மட்டும் பண்ணுங்க இனி தொடர்ந்து வாழ்வில் வெற்றி தான்..!!

Read Next

மருத்துவ ரகசியம்..!! அரைஞாண் கயிறு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular