மதுரையில் நாளை நடைபெறும் தவெக மாநாட்டுக்காக புதிய கொடிக் கம்பம் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 100 அடி கம்பம் இன்று விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் 40 அடி கம்பம் மேடை அருகில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தவெக தலைவர் விஜய் மாநாடு நடைபெறும் திடலில் அமைக்கப்பட்டுள்ள தனி அறையில் இன்றிரவு தங்குகிறார். நிர்வாகிகளுடன் இறுதிக்கட்ட பணிகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.




